SSTA வின் சீரிய முயற்சியினால் முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் பெற வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளது .தொடக்க கல்வி இயக்குனர் கடிதம் எண் ;023458/06.08.14 ல் வெளியிட்டதிலிருந்து பல சிக்கல்கள் உருவாகின பல ஆசிரியர்கள் பயின்ற உயர் கல்வி பயனற்று போயிற்று.
இதனை கையில் எடுத்த SSTA தொடர்ந்து மூன்று மாதங்கள் செப்டம்பர் ,அக்டோபர்
,நவம்பர் என பின்னேற்பு வழங்குவது பற்றி வலியுறுத்தியது அதனை ஏற்ற மதிப்பிற்குரிய தொடக்க கல்வி இயக்குனர் அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு ஆசிரியர்கள் பட்டியல் சேகரித்து கல்வி துறை செயலாளர் அவர்களிடம் அனுமதி பெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் பல கட்ட முயற்சிகளுக்கு பின் பெற்ற இந்த அறிய வாய்ப்புகளை பயன் படுத்தி அனைத்து ஆசிரியர்களும் பின்னேற்பு பெற்று கொள்ளுமாறு SSTA கேட்டுக்கொள்கிறது .மேலும் CPS A/C SLIP வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உடனே ஏற்க்கப்பட்டு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டுவிட்டது. பள்ளி கல்வி துறையில் உள்ளது போல தொடக்க கல்வி துறையில் மாநிலம் முழுதும் ஒரே மாதிரி பள்ளி வேலை நாட்கள் பின் பற்றப்பட வேண்டும் என்றும் பிப்ரவரி ,ஏப்ரல் மாதங்கள் SSTA வேண்டுகோள் விடுத்ததை ஏற்று இந்த ஆண்டு நடைமுறை படுத்தப்பட்டது .ஆனால் 220 வேலை நாட்களை தாண்டி CRC நாட்கள் வருகிறது எனவே அதை பள்ளி கல்வி துறையில் உள்ளது போல ஈடு செய் விடுப்பாக அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து அதற்கான ,அனைத்து அரசாணையை நண்பர்கள் துணையோடு சேகரித்து கொடுத்து தற்போது அது அரசாணையாக விரைவில் வெளிவரவிருக்கிறது.
No comments:
Post a Comment