Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, June 7, 2014

    தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியல் வெளியீடு தாமதம்

    பிளஸ் 1 வகுப்பு, வரும் 16ம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், தரம் உயர்த்தப்பட உள்ள, மேல்நிலை பள்ளிகளின் பட்டியல் குறித்த, அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாததால், மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.


    கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 100 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்றிதழ், வரும் 12-ம் தேதி வழங்கப்படுகிறது. தனியார், மெட்ரிக்., அரசு உதவி பெறும் பள்ளிகள், பிளஸ் 1 சேர்க்கையை, ஆன்-லைன் மதிப்பெண் பட்டியலை வைத்து ஏற்கனவே நிரப்பி விட்டன. 400-க்கு கீழே மதிப்பெண் பெற்றவர்கள், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளை நாடி வருகின்றனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில், 350- க்கு கீழே மதிப்பெண் பெற்றவர்களுக்கு, ஒரு சில பிரிவுகளில் இடமில்லை, என்று கூறப்படுகிறது. இதனால், அவர்கள் அரசு பள்ளியையே நாடி வருகின்றனர். ஆனால், உயர்நிலை பள்ளியிலிருந்து, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட வேண்டிய, பள்ளிகளின் பட்டியல், இதுவரை அரசால் வெளியிடப்படவில்லை. தேர்தல் உள்ளிட்டவையால், அதற்கான பூர்வாங்க பணிகளும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை, என கூறப்படுகிறது. பள்ளி தொடங்கிய பிறகு, தரம் உயர்த்துவது குறித்து, அறிவிப்பு வெளியிட்டால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட கூடும் என்பதால், பெற்றோர் அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க, தயக்கம் காட்டுவார்கள். உதவி பெறும் பள்ளியில் சேர்ந்த மாணவர்கள், தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் சேர விரும்பும்போது, அவர்களுக்கு பண விரையமும் ஏற்படும். இன்னும் ஓரிரு நாட்களில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடக்க உள்ளது. அதற்குள்ளாவது, தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும்.

    No comments: