தமிழ்நாடு தேர்வுத்துறையில் புதிய மாற்றங்களை வெற்றிகரமாக செய்த இயக்குனர் தேவராஜனுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு தேர்வுத்துறையில் இந்த கல்வியாண்டு தங்களின் துறையில் பல புதுமைகள் செய்து தேர்வு முறையை மாற்றி மாணவர்களுக்கு எவ்வித குழப்பமுமின்றி தேர்வு நடத்தி அதிக விழுக்காடு தேர்ச்சி சதவீதம் கண்டுள்ளனர்.
இந்தாண்டு அதிகளவில் மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றுள்ளனர். பல குழப்பங்கள், குளறுபடிகளை சீரமைத்து, ஆட்கள் பற்றாக்குறையை சமாளித்த தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜனுக்கு, தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment