Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, June 4, 2014

    அதிகாரிகள் தவறால் பணி நிரந்தரம் மறுப்பு: பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு நோட்டீஸ்

    அதிகாரிகள் தவறால் பணி நிரந்தரம் மறுக்கப்பட்டதாக தொழில்கல்வி ஆசிரியர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

    தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தைச் சேர்ந்த சக்திவேல் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.
    சக்திவேல் தனது மனுவில், கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் தொழில்கல்வி ஆசிரியராக 2000-ஆம் ஆண்டு ஜன. 7-இல் நியமிக்கப்பட்டேன். 2007-ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த உத்தரவில், 1996 செப். 20 முதல் 2000-ஆம் ஆண்டு ஜூன் 1 வரையில் பெறறோர் ஆசிரியர் கழகங்கள் நியமித்த தொழில்கல்வி ஆசிரியர்களை முன்னுரிமை அடிப்படையில் காலிப்பணியிடங்களில் நியமிக்குமாறு உத்தரவிட்டது.
    ஆனால், எனது பணி நியமன தேதியை 2000-ஆம் ஆண்டு டிச. 1 என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் தவறாக குறிப்பிட்டதால் பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து பள்ளி நிர்வாகம் தரப்பில் கடிதம் அனுப்பியும், பள்ளிக் கல்வித்துறை செயலர் மூலம் கடிதம் அனுப்பியும் பிழையைத் திருத்த பள்ளிக்கல்வி இயக்குநர் நடவடிக்கை எடுக்கவில்லை.
    இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இவ்வழக்கு விசாரணையில் தவறு நடந்திருப்பதை கல்வித்துறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். இருந்தபோதும் எனது மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
    இம்மனு, நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    No comments: