Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, June 6, 2014

    1800 அரசுப்பள்ளிகள் தரம் உயர்வு:ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் தொய்வு

    தமிழகத்தில் 2015ம் ஆண்டுக்குள் 1800 அரசு நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் என்ற அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட இலக்கில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 'இத்திட்டத்தின் கீழ் (ஆர்.எம். எஸ்.ஏ.,) 5 கி.மீ.,க்கு ஒரு உயர்நிலைப் பள்ளி என்ற அடிப்படையில் 2015க்குள் தமிழகம் முழுவதும் 1800க்கும் மேற்பட்ட அரசு நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்' என, அறிவிக்கப்பட்டது.
    இதன்படி, 2009-10ல் 200; 2011-12ல் 345; 2012-13ல் 710; கடந்த ஆண்டு 50 பள்ளிகள் என, 1,300 பள்ளிகள் மட்டுமே தரம் உயர்த்தப்பட்டுள்ளன. வரும் கல்வி ஆண்டில் இலக்கு நிறைவேறுமா என சந்தேகம் எழுந்துஉள்ளது. இதற்கான நடவடிக்கை தொய்வாக இருக்கிறது என ஆசிரியர்கள் சங்கங்கள் கூறுகின்றன.சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில் இத்திட்டத்திற்கான நிதியை அதிகரித்து, கல்வியை ஊக்குவிக்க வேண்டும். ஏற்கனவே அறிவித்தப்படி 2015க்குள் 1800க்கும் மேற்பட்ட பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

    No comments: