கற்றல், கற்பித்தல் பயிற்சிபெற்ற பி.எட்., கல்லூரி மாணவர்களிடம், பயிற்சி அளித்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கட்டாய நன்கொடை வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் 600 பி.எட்., கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, பாடப்பிரிவுக்கு தகுந்தாற்போல், ஓராண்டு முதல் ஈராண்டு வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், பி.எட்., கல்லூரி மாணவர்கள் ஏதாவது ஒரு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் 40 நாட்கள் கற்றல், கற்பித்தல் பயிற்சி எடுக்க வேண்டும்.
அதன்படி, நடப்பாண்டில் அக்டோபர் முதல், டிசம்பர் முதல் வாரம் வரை பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பயிற்சி எடுத்தனர். பயிற்சி முடித்த மாணவர்களிடம், பயிற்சி அளித்த பள்ளிகளின், தலைமை ஆசிரியர்கள் கட்டாய நன்கொடை வசூலித்துள்ளனர். ஒரு சில அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருக்கைகள், லாக்கர்களுக்காக, ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.500 முதல் ரூ.1,000 வரை வசூலித்துள்ளனர்.
பி.எட்., கல்லூரி மாணவி ஒருவர் கூறுகையில், "நன்கொடை கொடுத்தால் தான், கற்றல், வருகை பதிவேட்டில் கையெழுத்திட முடியும் என தலைமை ஆசிரியர்கள் வற்புறுத்தினர். வேறுவழியின்றி நன்கொடை கொடுத்தோம்" என்றார்.
No comments:
Post a Comment