தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், நடப்பு ஆண்டுக்கான, மாநில அளவிலான, கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி சென்னை மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
கடந்த 27ம் தேதி நடந்த போட்டியில், மாவட்ட அளவில், முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் விசயராகவன், போட்டிக்கு முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சி இயக்குனர் சேகர், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கினார்.
No comments:
Post a Comment