Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, December 30, 2013

    முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் பணியிடங்கள் மாயம்

    அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் வட்டார வள மையங்களில்முதுநிலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரிந்து வரும் 44மேற்பார்வையாளர்கள், 19ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அரசுமேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களாக மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.
    அதே நேரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வும்,தமிழகம் முழுவதும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நேற்று காலை10மணிக்கு தொடங்கியது.அதற்கு முன்னதாக மாவட்டங்களில் காலியாக இருந்த பணியிடங்களின் பட்டியல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஒட்டப்பட்டிருந்தது. நெல்லை மாவட்டத்தில்73பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மூவரும்,ஆசிரியர் பயிற்றுநர்கள் இருவர்,பட்டதாரி ஆசிரியர்கள்42பேர் என47பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். கலந்தாய்வு தொடங்கிய போது பல மாவட்டங்களில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் மாயமாகி இருந்தன. வெளியே ஒட்டப்பட்டிருந்த பட்டியலுக்கும்,கணினி திரையில் காண்பித்த பட்டியலுக்கும் தொடர்பு இல்லாமல் இருந்தது. இதனால் ஆசிரியர்கள்ஏமாற்றம் அடைந்தனர்.

    No comments: