Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, December 30, 2013

    "இளைஞர்களின் தொழிற்பயிற்சிக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு"

    "நடப்பு நிதி ஆண்டில், 2.24 லட்சம் இளைஞர்களுக்கு, தொழிற்பயிற்சி வழங்க 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என முகாமில், தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி பேசினார்.


    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் சார்பில், இளைஞர்களுக்கான தொழில் திறன் பயிற்சி முகாம் துவக்க விழா, குமாரபாளையத்தில் நடந்தது. தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி, இளைஞர்களுக்கு பயிற்சி ஆணை வழங்கி பேசியதாவது:

    தமிழகம், அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காணும் வகையில், தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். தொழில் துறையில், இளைஞர்கள் இலவசமாக தொழில் பயிற்சி பெற்று, வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, 2013-14ம் நிதியாண்டில், 18 துறைகளில், 2.24 லட்சம் இளைஞர்களுக்கு, தொழிற்பயிற்சி வழங்க, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்துள்ள, ஒரு லட்சத்து, 92 ஆயிரத்து, 676 பேரில், நடப்பு ஆண்டில், அரசு வேலை பெற்றவர்கள், 522 பேர். ஒன்பது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், 497 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

    குமாரபாளையம், திருச்செங்கோடு போன்ற பகுதிகளில் உள்ளவர்கள், தொழிற்பயிற்சி பெறவேண்டும் என்பதற்காக, பத்து லட்சம் ரூபாய், அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அவற்றை பயன்படுத்தி, இளைஞர்கள், வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    No comments: