Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, December 30, 2013

    பழைய முறைப்படி அரையாண்டு விடுமுறையை அறிவிக்க வேண்டும்

    விடுமுறை நாட்களை குறைக்க கல்வித்துறை திட்டமிட்டு இருப்பதாக மாநில பட்டதாரி ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து சங்க பொதுச்செயலாளர் பாரி விடுத்துள்ள அறிக்கை:


    புதுவை கல்வித்துறையில் இருந்து பள்ளிகளுக்கு முதலில் வந்த சுற்றறிக்கையில் ஜனவரி2முதல்10வரைய விடுமுறை எனவும், 11, 12ம்தேதி பள்ளிகள் இயங்கும் எனவும், 14,15,16ம்தேதி பொங்கல் விடுமுறை எனவும், 17ம்தேதி முதல் பள்ளிகள் இயங்கும் எனவும் கூறப்பட்டிருந்தது. பின்னர் வந்த சுற்றறிக்கையில் ஜன.2முதல்11வரை பள்ளிகள் இயங்கும் எனவும், 12முதல்20வரை அரையாண்டு விடுமுறை எனவும், 21ம்தேதி முதல் பள்ளிகள் இயங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் வேடிக்கை என்னவெனில்12முதல்20வரை உள்ள நாட்களில்2நாட்கள் சனிக்கிழமை, 2நாட்கள் ஞாயிற்றுக்கிழமை, 3நாட்கள் பொங்கல் விடுமுறையாகும். 

    இந்த நாட்களை கழித்து பார்த்தால் அரையாண்டு விடுமுறையாக கல்வித்துறை அறிவிப்பது வெறும்2நாட்கள் மட்டுமே.மேலும் ஜன.2முதல்11ம்தேதிவரை பள்ளிகள் எப்படி இயங்கும் என்பதை கல்வித்துறை கட்டாயம் தெளிவுப்படுத்த வேண்டும்.1முதல்8ம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய3ம் பருவ பாட புத்தகங்கள் இன்றி வகுப்புகள் நடைபெறும். இதுதான் உண்மை நிலை.இதுமட்டுமின்றி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் அதேநாளில் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி என்று கூறியிருப்பது மற்றொரு அவலநிலையாகும். மேலும் அந்த நாள் பள்ளியின் வேலைநாளாம். மாணவர்கள் பள்ளிக்கு வராமல் அந்த நாளை பள்ளியின் வேலைநாளாக கணிக்கும் இந்தபோக்கு புதுவையில் மட்டுமே அரங்கேறுகிறது. இவையெல்லாமே அந்த220வேலை நாட்களில் பள்ளியை நடத்த துறை எடுக்கும் அவலநிலையாகும்.எனவே அரையாண்டு விடுமுறையை பழைய முறைப்படி ஜன.1முதல்17வரை அறிவிக்க வேண்டும். மாணவர்கள்,ஆசிரியர்களின் மனநிலையை உணர்ந்து பள்ளி கல்வித்துறை செயல்பட வேண்டும். இப்பிரச்னையில் முதல்வர் உடனடியாக தலையிட்டு மாணவர்கள்,ஆசிரியர்களின் நலனை பாதுகாக்க வேண்டும்.

    No comments: