Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, December 28, 2013

    அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

    அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என, முதல்வர் ரங்கசாமி கூறினார். தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த "கணித உலகம்-2013" என்ற கண்காட்சியை திறந்து வைத்து, முதல்வர் பேசியதாவது:

    "புதுச்சேரி மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக வந்தால் புதுச்சேரிக்கு பெருமை கிடைக்கும். இதற்காகத்தான் பிறப்பட்டோர் நலத்துறை பாட்கோ சார்பில் மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் பயிற்சி பெற அரசு செலவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அடிப்படை கல்வியை தரமானதாக அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் தான் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியும். முன்பு, ஜிப்மர் மருத்துவமனையில் 15 எம்.பி.பி.எஸ். சீட் பெறுவதற்கு தவம் கிடக்க வேண்டும். தற்போது புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் 265 சீட்டுகள் எம்.பி.பி.எஸ். படிப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

    தனியார் பள்ளிகள் தான் சிறந்தது என பெற்றோர் பலர் நினைக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும்." இவ்வாறு முதல்வர் பேசினார்.

    No comments: