அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என, முதல்வர் ரங்கசாமி கூறினார். தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த "கணித உலகம்-2013" என்ற கண்காட்சியை திறந்து வைத்து, முதல்வர் பேசியதாவது:
"புதுச்சேரி மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக வந்தால் புதுச்சேரிக்கு பெருமை கிடைக்கும். இதற்காகத்தான் பிறப்பட்டோர் நலத்துறை பாட்கோ சார்பில் மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் பயிற்சி பெற அரசு செலவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அடிப்படை கல்வியை தரமானதாக அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் தான் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியும். முன்பு, ஜிப்மர் மருத்துவமனையில் 15 எம்.பி.பி.எஸ். சீட் பெறுவதற்கு தவம் கிடக்க வேண்டும். தற்போது புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் 265 சீட்டுகள் எம்.பி.பி.எஸ். படிப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
தனியார் பள்ளிகள் தான் சிறந்தது என பெற்றோர் பலர் நினைக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும்." இவ்வாறு முதல்வர் பேசினார்.
No comments:
Post a Comment