Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, December 31, 2013

    மழலையர் பள்ளி ஆசிரியைகள் பணி நிரந்தரம் எப்போது?

     சென்னை மாநகராட்சி மழலையர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் உரிய பயிற்சி முடித்தும், பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். இதுகுறித்து, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை மாநகராட்சியின் வசம், தற்போது 40 மழலையர் பள்ளிகள் உள்ளன. அவற்றில் 92 ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். அவர்களை தவிர வகுப்பறைக்கு ஒரு ஆயா, பள்ளிக்கு ஒரு அலுவலக உதவியாளர் பணியில் உள்ளனர். துவக்கத்தில் அவர்கள் அனைவரும், தற்காலிகமாக பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் 25 ஆசிரியைகள், ஆயாக்கள், அலுவலக உதவியாளர்கள், பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆசிரியைகள், 67 பேர் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

    அவர்கள் அனைவரும், அங்கீகாரம் இல்லாத நிறுவனத்தில், ஓராண்டு மழலையர் பள்ளி ஆசிரியர் பயிற்சி முடித்ததாக காரணம் கூறப்பட்டது. இதை அடுத்து அந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், மாநகராட்சி சார்பில் ஆறு மாதம், மழலையர் பள்ளி ஆசிரியர் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த பயிற்சிக்கு பின், அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், சம்பளத்தில் வித்தியாசம், விடுப்பு உட்பட, பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக, அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாநக ராட்சி கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,மழலையர் பள்ளி ஆசிரியைகளில் இரண்டு ஆண்டு பயிற்சி முடித்தோர் பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். ஓராண்டு பயிற்சி முடித்தவர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பான கோப்பு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்றார்.

    மேலும் அவர் கூறுகையில், "தங்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடக் கோரி ஆசிரியைகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு நிலுவையில் உள்ளது. அவர்களை பணிக்கு தேர்வு செய்யும் போது, இரண்டு ஆண்டு பயிற்சி முடித்திருக்க வேண்டும் என குறிப்பிட்டு சொல்லப்படவில்லை. அதனால், ஓராண்டு பயிற்சி முடித்த ஆசிரியைகளின் பணி நிரந்தரத்தை யாராலும் தடுக்க முடியாது. ஆனாலும், அரசின் ஒப்புதல் கிடைக்காததால், பணி நிரந்தரம் தாமதமாகி வருகிறது" என்றார்.

    No comments: