Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, February 6, 2013

    உதவி தொடக்கக் கல்வி அலுவலக பணியில் தொய்வு ஏற்படுவதாக புகார்

    உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் கம்ப்யூட்டர் மயமாக்கப்படாததால், பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. எனவே, பிற அலுவலங்களைப் போல் உதவி தொடக்க கல்வி அலுவலகமும் கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும், 385 உதவி தொடக்க கல்வி
    அலுவலகம் உள்ளது. அதில், ஒரு தொடக்க கல்வி அலுவலர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் உட்பட பல்வேறு நிலைகளில் அமைச்சுப்பணியாளர்கள் பணியில் உள்ளனர்.

    அந்த ஊழியர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலக கட்டுப்பாட்டில் வரும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குதல், ஈட்டிய விடுப்பு ஊதியம், சேமநல நிதி பிடித்தம் மற்றும் கடன் பெற்றுத் தருதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்கின்றனர். அனைத்து பணிகளும், பதிவேடுகள் மூலமே பராமரிப்பு செய்யப்படுகிறது. அதனால் பணியில் தொய்வும், காலதாமதமும் நேரிடுகிறது.
    இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலகமும் கம்யூட்டர் மயமாக்கப்பட வேண்டும். அதன்மூலம் பள்ளி மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான உத்தரவை ஆன்லைன் முறையில் பிறப்பிக்க வேண்டும் என, தமிழக ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    No comments: