Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, February 6, 2013

    அரையாண்டுத் தேர்வு முடிந்த பிறகு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள்!

    காரைக்காலில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து 15 நாள்களுக்குப் பிறகு, மாணவர்களுக்கான இலவச பாடப் புத்தகங்கள் கடந்த 2 நாள்களாக விநியோகிக்கப்படுகிறது.
    முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வி பாடப் புத்தகம் தமிழகத்திலிருந்து பெறப்பட்டே புதுவை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 3-ம் பருவப் பாடப் புத்தகங்கள் மாணவர்கள் அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளிக்குச் சென்றதும் வழங்கப்பட வேண்டும்.

    ஆனால் புதுவை அரசு நிதி தட்டுப்பாடு பிரச்னையில் சிக்கியுள்ள நிலையில், குறித்த காலத்தில் பாடப்புத்ககம் வரவழைக்க முடியாத நிலை இருந்தது. இதனால் அரையாண்டு தேர்வுக்கான விடுமுறை இந்த ஆண்டு கூடுதலாக 10 நாள்கள் அளிக்கப்பட்டு கடந்த மாதம் ஜன., 21ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறந்தும் பள்ளிகளுக்கு கல்வித்துறை 3-வது டேர்ம் பாடப் புத்தகம் அனுப்பி வைக்க முடியாததால், மாணவர்கள் கடந்த 15 நாள்களாக நடப்பு பாடத்தை படிக்க முடியாமல் போனது.

    தற்போது காரைக்கால் மாவட்ட கல்வித் துறை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை 3-ம் டேர்ம் பாடப் புத்தகங்கள் வந்து சேர்ந்தது. இதனை உடனடியாக அந்தந்த பள்ளி நிர்வாகத்தை அழைத்து விநியோகிக்கும் பணியை கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

    காரைக்கால் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் வந்துவிட்டதாகவும், 110 பள்ளிகளுக்கு விநியோகம் செய்துவருவதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

    No comments: