Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, February 14, 2013

    பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த கோரி முதுகலை ஆசிரியர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்

    தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். ஆறாவது ஊதியக்குழுவின் ஊதிய முரண்பாடுகளை களைந்திட அமைக்கப்பட்ட மூன்று
    நபர் குழுவின் அறிக்கையை உடன் வெளியிட வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்து, முந்தைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். பதவி உயர்வின்போது, இரண்டு ஊதிய உயர்வுகள் வழங்க வேண்டும்.
    வணிகவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கும், அகமதிப்பீடு முறை அமல்படுத்த வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் வரும், மார்ச் மாதம் நடக்க உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வில், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் மற்றும் பறக்கும்படை உறுப்பினர்கள் உள்ளிட்ட தேர்வு பணிகளை பணி மூப்பு அடிப்படையில் வழங்க வேண்டும்.
    இச்சங்க கோரிக்கையை ஏற்று, பிளஸ் 1 வகுப்பு விடைத்தாள் திருத்தம் பணிக்கான மதிப்பூதியத்தை அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் வழங்க ஆவணம் செய்த, ஈரோடு சி.இ.ஓ.,க்கு நன்றி தெரிவிப்பது, என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில துணைத்தலைவர் மாணிக்கம், மகளிரணி செயலாளர் சொர்ணமீனா, மாவட்ட பொருளாளர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

    No comments: