ஒளியாற்றலை சமுதாய நற்செயலுக்கு பயன்படுத்துவதில் உள்ள வாய்ப்பு, சவால்கள்' குறித்து பள்ளி மாணவர்களுக்கான தேசிய கருத்தரங்கு ஆக., 31ல் சென்னையில் நடக்கிறது.பள்ளிக் கல்வித்துறை, பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பநிறுவனம் இணைந்து தமிழக அளவில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கருத்தரங்குகளை நடத்துகின்றன.
தற்போது 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 'ஒளியாற்றலை சமுதாய நற்செயலுக்கு பயன்படுத்துவதில் உள்ள வாய்ப்பு, சவால்கள்' என்ற கருத்தரங்கு நடத்த உள்ளன.
இதுகுறித்து 6 நிமிடத்திற்குள் மாணவர்கள் விளக்கம் அளித்து, நடுவர்களின் கேள்விகளுக்கு பதில் தர வேண்டும். கல்வி மாவட்ட அளவில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ஆக., 7ல் மாவட்ட அளவிலான கருத்தரங்கு நடக்கும்.தேசிய கருத்தரங்கு: அதில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு தேசிய கருத்தரங்கு ஆக., ௩1ல் சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.
No comments:
Post a Comment