Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, August 17, 2015

    4 ஆண்டுகளில் 72,843 ஆசிரியர்கள் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா

    தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 4 ஆண்டுகளில் 72,843 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; திருமண உதவித் திட்டத்தின் கீழ் 2,154 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர்ஜெயலலிதாசுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா கொடியேற்றி வைத்து பேசியதாவது:


    இந்திய நாட்டின் விடுதலைக்காக உரிமைக் குரல் எழுப்பி, நாளெல்லாம் சிறை கண்டு, அடிபட்டு, மிதிபட்டு, நாடி நரம்புகள் வலுவிழந்து, மாண்டு போன பெயர் தெரியாத ஆயிரக்கணக்கான சுதந்திரத் தியாகிகள்; தூக்குக் கயிற்றை துச்சமென மதித்து முத்தமிட்ட தென்புலத்து வீரபாண்டிய கட்டபொம்மன்; புலியெனச் சீறிய பூலித்தேவன்;வீரமிகு மருது பாண்டியர்; தீரமிகு தீரன் சின்னமலை; தாய்நாட்டுக் கொடி காக்க தன்னை மாய்த்துக் கொண்ட கொடி காத்த திருப்பூர் குமரன்; தாய் நாட்டுக்காக தன்னையே மாய்த்துக் கொண்ட வீர வாஞ்சிநாதன், பாட்டுக்கொரு புலவன் பாரதி; தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்" என்று சொன்ன பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்; வீரமங்கை வேலு நாச்சியார்; வீரமங்கை வேலுநாச்சியாரின்படைத் தளபதி வீரத் தாய் குயிலி; வட இந்தியாவைச் சேர்ந்த பகத் சிங், குருதேவ், ராஜகுரு என எண்ணற்ற வீரர்களை நெஞ்சில் நினைத்து போற்றுவதற்கும்; அவர்களின் புகழை பாடுவதற்கும்; அவர்களின் தியாகங்களை நினைவு கூரவும் இந்தச் சுதந்திரத் திருநாளை நாம் இங்கே இன்று கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

    1 comment:

    syllabus said...

    4 ஆண்டுகளில் 72843 ஆசிரியர்களை நியமித்ததாக கூறும் முதல்வர் அவர்கள் அதே 4 ஆண்டுகளில் பணி நிறைவு பெற்றவர்கள் எத்தனை பேர், இயற்கை எய்தியவர்கள் எத்தனை பேர்,விருப்ப ஓய்வு பெற்றவர் எத்தனை பேர் என்ற விவரத்தையும் கூறியிருந்தால் புதிய நியமனங்கள் எத்தனை என்ற விவரத்தை அறிந்திருக்கலாம்.