தொலைதூர கல்வி மூலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளை நடத்துவதற்கு யுஜிசி தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலை மானியக்குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொலைதூர கவுன்சில்(டெக்) அமைப்பின் பணிகள் யுஜிசி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனையடுத்து தொலைதூர கல்வி திட்டத்தில் வழங்கப்படும் படிப்புகளை ஒழுங்குபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக எந்த ஒரு பல்கலைக்கழகம் மற்றும் நிகர்நிலை பல்கலைகழகம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ படிப்புகளை தவிர, தொலைதூர கல்வி திட்டத்தில் பிற தொழில்நுட்ப பாடங்கள் மற்றும் பட்டய படிப்புகளை நடத்தக்கூடாது.
மீறினால், யுஜிசி அல்லது ஏஐசிடிஇ நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment