08.03.2015 ஞாயிறு காலை 10 மணிக்கு தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் ஜோசப் சேவியர் மற்றும் தமிழக தமிழ் ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் இளங்கோ ஆகியோரின் தலைமையில் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்றது.
இதில் சுமார் 3000 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பெண் ஆசிரியைகளும் பெருமளவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. பேரணி 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு முழக்கமிட்டு கிளம்பியது.
இதில் டி.என்.பி.ஜி.டி.ஏ மாநில தனியார் பள்ளி செயலாளர் சுப்பிரமனியன் கலந்து கொண்டு 15 அம்ச கோரிக்கைகளையும் விளக்கி பேசினார். பேரணி இராமச்சந்திரன் பூங்காவில் நிறைவுற்றது.
No comments:
Post a Comment