Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, March 10, 2015

    சிவகங்கை மாவட்டம் ஜாக்டோ கவன ஈர்ப்பு பேரணி

    08.03.2015 ஞாயிறு காலை 10 மணிக்கு தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் ஜோசப் சேவியர் மற்றும் தமிழக தமிழ் ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் இளங்கோ ஆகியோரின் தலைமையில்  சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்றது.
    இதில் சுமார் 3000 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பெண் ஆசிரியைகளும் பெருமளவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. பேரணி 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு முழக்கமிட்டு கிளம்பியது.
    இதில் டி.என்.பி.ஜி.டி.ஏ மாநில தனியார் பள்ளி செயலாளர் சுப்பிரமனியன் கலந்து கொண்டு 15 அம்ச கோரிக்கைகளையும் விளக்கி பேசினார். பேரணி இராமச்சந்திரன் பூங்காவில் நிறைவுற்றது.

    No comments: