"சிவில் நீதிபதி பணியிடத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு காலதாமதமாக வந்தால், அனுமதி மறுக்கப்படும்" என, தேர்வர்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., எச்சரித்துள்ளது.
சிவில் நீதிபதி பதவியில் 162 காலியிடங்கள் உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வில் தேர்வான 590 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு மார்ச் 4ம் தேதி வரும்படி, டி.என்.பி.எஸ்.சி., அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்த தகவல்கள் டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்தை விட, அரை மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக வந்தால், அனுமதிக்கப்பட மாட்டர் என டி.என்.பி.எஸ்.சி., செயலர் எச்சரித்துள்ளார்.
No comments:
Post a Comment