Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, March 2, 2015

    535 தொடக்க பள்ளிகள் மூடப்படலாம் என்று அச்சம்

    535 தொடக்க பள்ளிகளில், மாணவ, மாணவியர் வருகை இல்லை. எனவே, இப்பள்ளி ஆசிரியர்களை, வேறு பள்ளிகளுக்கு அரசு நியமித்துள்ளது. எதிர்வரும் நாட்களில், இப்பள்ளிகள் மூடப்படலாம் என்ற அச்சம், பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளது. 

    கர்நாடக மாநிலத்தில், 9,503 அரசு தொடக்கப் பள்ளிகளில், 20க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர். இப்பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தார் போல், ஓரிரு ஆசிரியர்களை மட்டும் விட்டு விட்டு, மற்றவர்களை பக்கத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு, அரசு நியமிக்கிறது. இது, ஆசிரியர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
    நடப்பு, 2014 -- 15ம் ஆண்டில், 'டிஸ்டிரிக்ட் இன்பர்மேஷன் ஆப் எஜுகேஷன்' ஆய்வில், இத்தகவல் பகிரங்கப்படுத்தப்பட்டு உள்ளது.
    பெங்களூரில், 211 அரசு தொடக்கப் பள்ளிகள், 11 நிதியுதவி பெறும் பள்ளிகள், 137 நிதியுதவி பெறாத தனியார் பள்ளிகளில், 20க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர்.
    மாவட்டம் வாரியாக கணக்கெடுத்தால், ஹாசனில், 20க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை, 992 ஆகும். அதேபோன்று, கதக்கில், 27 அரசு பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளனர்.
    அரசு பள்ளிகளுக்கு, மாணவர்களை ஈர்க்கவும், பள்ளியை விட்டு சென்றவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வரவும், அரசு பெரும்பாலான திட்டங்களை வகுத்துள்ளது. ஆனால், இதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. கடந்தாண்டு, 675 ஆக இருந்த மாணவர்கள் இல்லாத அரசு பள்ளிகளின் எண்ணிக்கை, இந்தாண்டு, 535 ஆக குறைந்துள்ளது, சற்று ஆறுதலான விஷயமாகும். 20க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை மட்டும், 600 ஆக உயர்ந்துள்ளது.கடந்தாண்டு, 8,903 ஆக இருந்த இப்பள்ளிகளின் எண்ணிக்கை, இம்முறை, 9,503 ஆக அதிகரித்து உள்ளது. அரசு பள்ளிகளில் மட்டுமின்றி, பெரும்பாலான தனியார் பள்ளிகளிலும் கூட, 20க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர்.
    ஆனால், இவைகளின் எண்ணிக்கை, அரசு பள்ளிகள் போன்று பெரியளவில் இல்லை. அரசு நிதியுதவி பெறும், 15 பள்ளிகள், நிதியுதவி பெறாத, 138 தனியார் பள்ளிகளில், ஒரு மாணவரும் இல்லாததால், அப்பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. மாணவர்கள் இல்லாததால் பள்ளிகள் மூடப்படுவது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    No comments: