Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, March 13, 2015

    நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் தர ஊதியமான ரூ.4700 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுவதை மாற்றி தனி ஊதியம் வழங்கிடக் கோரி வழக்குத் தொடர உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் முடிவு

    உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் - சென்னை - 600 101. மாநில மையத்தின் செயற்குழுக் கூட்டம் 12.03.2015 பிற்பகல் மதுரையில் மாநிலத் தலைவர் திரு. மு. அய்யாச்சாமி, அவர்கள் தலைமையில், கெளரவத் தலைவர் திரு. அ. சுந்தரராஜன்,   அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலர் திரு. சி. செளந்தரராஜன், அவர்கள் அனைவரையும் வரவேற்று அறிக்கை வாசித்தார்.    

    மாநில பொருளர் திரு. அ. தம்பித்துரை, மாநில துணை தலைவர் திரு. கு. பால்ராஜ் அருள், மாநில துணைச் செயலர் திரு. ஜோசப் அண்டோரெக்ஸ், மாநில மகளிரணி திருமதி. ஈவ்லின் ஜெனட்,  மற்றும் 50 - க்கும் மேற்பட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மாநில மையம், விவாதம் மேற்கொண்டு, பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    1. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் தர ஊதியமான ரூ.4700 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுவதை மாற்றி தனி ஊதியம் வழங்கிடக் கோரி வழக்குத் தொடர்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

    2. சென்னை உயர்நீதிமன்ற எல்லைக்குட்பட்ட சென்னை, திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல், கோவை, விழுப்புரம் மாவட்ட உ.தொ.க. அலுவலர்கள் சார்பாக சென்னையில் தனி வழக்குத் தொடுப்பது எனத் தீர்மானிக்கப் பட்டது.

    13.03.2015 அன்று மதுரை கிளையில் வழக்குத் தொடர 42 உ.தொ.க. அலுவலர்கள் கையொப்பமிட்டனர். இக்கூட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட பெண் உ.தொ.க. அலுவலர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட உ.தொ.க. அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மேற்காண் அறிக்கை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்க மாநில தலைமை நிலையச் செயலர் திரு. இரா.கணேசன் அவர்களால் வெளியிடப்படுகிறது.

    No comments: