Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, March 5, 2015

    மொபைல் இண்டர்நெட் டேட்டா கட்டணங்கள் தொடர்ச்சியாக உயர்ந்து வரும் நிலையில், அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் 3G இண்டர்நெட் டேட்டா கட்டணத்தை பாதியாக குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. BSNL நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 3G இண்டர்நெட் டேட்டா கட்டணத்தை 50%-மாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 7-வது கட்ட விரிவாக்கப்பணிகள் ரூ.4800 கோடி செலவில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. வரும் ஜூன் மாதத்திற்குள் அந்த பணிகள் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுவதோடு அதன் பின் விலை குறைக்கப்படும் என்று பி.எஸ்.என்.எல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் நெட்வொர்க் கெப்பாசிட்டியை அதிகரித்து நாடு முழுவதும் 2500 நகரங்களில் வை-ஃபை ஹாட்ஸ்பாட்டுகளையும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளது. தற்போது முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் 2G டேட்டாவுக்கு வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையாக பி.எஸ்.என்.எல் 3G டேட்டாவை வழங்கி வருகிறது. குறிப்பாக, 1GB அளவு 3G இண்டர்நெட் ரூ.175-க்கும், 2GB ரூ.251-க்கும் வழங்கி வருகிறது.

    டி.என்.பி.எஸ்.சி., நடத்திய மாவட்ட சிவில் நீதிபதி பணியில், 162 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, நவம்பரில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற, 590 பேர், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். சரிபார்ப்புப் பணி, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், நேற்று காலை துவங்கியது.


    முதல் இரண்டு நாட்கள், தலா, 55 பேரிடமும், 6ம் தேதி முதல், தினமும் தலா, 120 பேரிடமும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, மார்ச் 11ல், பணிகள் முடியும்; பின், நேர்முகத் தேர்வு நடக்கும். டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன், சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டார். அப்போது, அவர் கூறும் போது, ''குரூப் - 2 தேர்வு முடிவுகள், அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளது; மாவட்டக் கல்வி அலுவலர் பணித் தேர்வு முடிவுகளும், விரைவில் வெளியாகும்; குரூப் - 1 தேர்வு, மே மாதம் அறிவிக்கப்படலாம்; மற்ற புதிய தேர்வுகள், ஆண்டு திட்டப்படி அறிவிக்கப்படும்,'' என்றார். இதற்கிடையில், மோட்டார் வாகன ஆய்வாளருக்கான, 17 பணியிடங்களுக்கு தேர்வான, 42 பேருக்கு, நேற்று டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில் தேர்வாகும் நபர்களுக்கு, இன்று நேர்முகத் தேர்வு நடக்கிறது.

    No comments: