Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, March 9, 2015

    பிளஸ் 2 தேர்வு : கோயிலில் கலை நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த கிராம மக்கள்

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் பிளஸ் 2 தேர்வும் முடியும் வரை கோயிலில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை என கிராம மக்கள் தீர்மானித்துள்ளனர். ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த பிப். 1 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது.இதைத்தொடர்ந்து கோயிலில் 48 நாட்களுக்கு மண்டகப்படிதாரர்கள்,
    கிராம மக்கள்சார்பில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சிகளும் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
    இந்நிலையில் கொத்தமங்கலத்தில் பிளஸ் 2, 10 ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு முடியும் வரை கொத்தமங்கலம் முத்து மாரியம்மன் கோயிலில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை எனகிராமத்தினர் முடிவெடுத்துள்ளனர். இதனால் தற்போது தினமும் கோயிலில் சிறப்பு வழிபாடு மட்டுமே நடைபெறுகிறது.கலைநிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. கிராமத்தினரின் இத்தகைய முடிவால் மாணவர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் கிராமத்தினருக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    No comments: