வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண்ணை அளித்தால்தான் அவர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கும் நடைமுறை ஆந்திரத்தில் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்த விவரம்: ஆந்திர போக்குவரத்துத் துறையினர் மாநிலத்தின் முக்கியமான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் தனி கவுன்ட்டர்களை திறந்துள்ளனர். இவற்றில், பெட்ரோல். டீசல் வாங்க வரும் வாடிக்கையாளர்கள், தங்களின் ஆதார் அட்டை எண், வாகனத்தின் பதிவெண், ஓட்டுநர் உரிம எண் ஆகியவற்றை அளித்தால்தான் அவர்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் தரப்படும். ஆந்திர போக்குவரத்துத்துறையின் இந்த அதிரடித் திட்டம் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
No comments:
Post a Comment