Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, December 24, 2014

    படிக்கும் பள்ளிகளிலேயே எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வுமையம்: அரசுக்கு நோட்டீஸ்

    அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு மையங்களை ஏற்படுத்தக் கோரும் மனுவுக்கு பள்ளி கல்வித் துறை இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

    மதிமுக மாணவரணி மாநிலச் செயலர் டி.எம்.ராஜேந்திரன் இம்மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், கிராமப்புற மாணவர்கள் தொலைதூரம் சென்று தேர்வுஎழுதுவதால் சோர்வு ஏற்பட்டு முழுத் திறனையும் செலுத்த முடியாத நிலைஉள்ளது. இதனால் மதிப்பெண் குறைவு ஏற்பட்டு எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. எனவே அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்களை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இம்மனு நீதிபதி டி.ராஜா முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

    1 comment:

    Unknown said...

    போறசி போக்க பார்த்தா வீட்டுக்கு ரெண்டு வாத்தியார்களை நியமிக்க கோர்ட்ல கேப்பாங்களோ