Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, June 6, 2014

    அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி தொடங்க கோரிக்கை

    தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கினால் மட்டுமே மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 23,815 அரசு தொடக்கப்பள்ளிகள், 7,651 அரசு நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.

    அரசு சார்பில் புத்தகம், நோட்டு, உணவு, சீருடை, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
    ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் அரசு தொடக்கப்பள்ளிகளின் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்துக்கொண்டே வருகிறது. சுமார் 95சதவீத பெற்றோர் தங்களது பிள்ளைகளை 3வயது முதல் எல்கேஜி, யுகேஜி படிக்க தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
    தொடர்ந்து தனியார் பள்ளிகளிலேயே அந்த மாணவர்கள் படிப்பை தொடர்கின்றனர். தனியார் பள்ளிகளில் கேஜி வகுப்புகளை படித்துவிட்டு முதல் வகுப்பிற்கு அரசுப்பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் விரும்புவதில்லை. ஆனால் தனியார் பள்ளியில் தொடக்கப்பள்ளி படிப்பு முடிந்தவுடன் ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, பிளஸ் ஒன் வகுப்புகளில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
    இந்நிலையில் அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி பரிசோதனை முயற்சியாக 2013ம் ஆண்டிற்கு முன் 500பள்ளிகள், 2013ல் 3ஆயிரம் பள்ளிகளிலும் தொடங்கப்பட்டது. இதனால் ஓரளவு மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    இந்நிலையில் அரசு நடத்தும் அங்கன்வாடி மையங்களை பள்ளிகளுடன் இணைத்து அவைகளை கேஜி வகுப்புகளாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
    அவர்கள் கூறுகையில், ‘அங்கன்வாடி மையங்களால் எவ்வித பயனும் இல்லை. அனைத்து இடங்களிலும் அவைகள் போதிய வசதிகள், பிள்ளைகள் எண்ணிக்கையின்றி பெயரளவிலேயே இயங்கி வருகிறது.
    அவைகளை கலைத்துவிட்டோ அல்லது பள்ளிகளுடன் இணைத்தோ எல்கேஜி, யுகேஜி வகுப்புகளாக அங்கீகரித்தால் நிச்சயம் அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையில் மிகப்பெரிய மாற்றம் வரும்’ என்றனர்.

    No comments: