Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, June 24, 2014

    அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்வு: மசோதா நிறைவேற்றம்

    அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 60ஆக உயர்த்தி ஆந்திர சட்டசபையில் மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத் தவிர அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். சட்டசபையில் மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் பேசியதாவது: தற்போதுள்ள சட்டம் 1984ல் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
    உலக சுகாதார நிறுவன அறிக்கைபடி இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் 65ஆக உள்ளது. தற்போது மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளதால், ஆந்திராவின் வளர்ச்சிக்கு அனுபவம் உள்ளவர்களின் சேவை தேவை. அதனால் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 60ஆக உயர்த்தப்படுகிறது.

    இதைத் தவிர அரசு ஊழியர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்படும். அனைத்து அரசு ஊழியர்களும் ஓய்வுபெறும்போது சொந்த வீடு இருக்க வசதி செய்யப்படும். மருத்துவக் காப்பீட்டு திட்டம் உள்ளிட்டவை செய்யப்படும். இவை அனைத்தும் படிப்படியாக செயல்படுத்தப்படும். மாநிலத்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற நாட்கள் விடுமுறை நாட்களாக கருதப்படும் என்றார் அவர். அதைத் தொடர்ந்து ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

    * மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 60 ஆக கடந்த 1998ம் ஆண்டு உயர்த்தப்பட்டது.

    * இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் 65 ஆக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது.

    * ஆந்திராவின் வளர்ச்சிக்கு அனுபவம் வாய்ந்த அரசு ஊழியர்களின் சேவையை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    * அரசும் ஊழியர்களும் புதிய மாநிலமான ஆந்திராவின் முன்னேற்றத்துக்கு கடுமையாக உழைக்க வேண்டும்.

    * அரசு துறையிலும் தனியார் துறையிலும் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு வேலை என்ற கொள்கை நிறைவேற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. 

    * அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் மசோதா விவாதம் இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    No comments: