![](https://m.ak.fbcdn.net/sphotos-c.ak/hphotos-ak-xpf1/t1.0-9/10410337_595909593863370_6375106881434934855_n.jpg)
அப்போது திடீரென அவன் மயக்கம் அடைந்து விழுந்தான். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள் அவனை மீட்டு ஒரு ஆட்டோவில் ஏற்றி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நாமக்கல் அருகே எம்.ராசாம்பாளையத்தில் வசித்து வரும் அந்த மாணவனின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பரிதாப சாவு
இதற்கிடையில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற மாணவனை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாணவன் உடல்நலக்குறைவால் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து அறிந்த மாணவனின் தாய் ஜோதி மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து மாணவனின் உடலை பார்த்து கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்கு பிறகே மாணவனின் சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார் கூறினர். இந்த சம்பவத்தால் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
No comments:
Post a Comment