Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, June 14, 2014

    இன்று கிராம நிர்வாக அலுவலர் தேர்வு: 10 லட்சம் பேர் பங்கேற்பு

    தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு இன்று காலை 10:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை நடக்கிறது. 10 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.


    இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா கூறியிருப்பதாவது: வி.ஏ.ஓ. தேர்வை 10 லட்சத்து 8,662 பேர் எழுதுகின்றனர். 3,628 தேர்வு அறைகளில் தேர்வு நடக்கிறது. அனைத்து தேர்வு அறைகளிலும் வீடியோ கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தேர்வு அறைக்குள் மொபைல் போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் எதையும் கொண்டு செல்லக்கூடாது. மீறுபவர்களை அவர்களின் தேர்வு செல்லாதவை என அறிவிப்பதுடன், தொடர்ந்து தேர்வெழுத தடை விதிக்கப்படும். இவ்வாறு, ஷோபனா தெரிவித்துள்ளார்.

    வருவாய்த் துறையில் 2,342 வி.ஏ.ஓ. பணிஇடங்களை நிரப்ப இந்த போட்டித் தேர்வு நடக்கிறது. 200 அப்ஜக்டிவ் டைப் கேள்விகளுக்கு தலா 1.5 மதிப்பெண் வீதம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

    No comments: