Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, June 7, 2014

    10ம் வகுப்பு செய்முறை தேர்வுகளுக்கான சோதனைகள் 26 ஆக அதிகரிப்பு

    பத்தாம் வகுப்பில் செய்முறை தேர்வுகளுக்கான சோதனைகள் (எக்ஸ்பிரிமிண்ட்) இந்தாண்டு 16ல் இருந்து 26 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத் தேர்வுகளுக்கு, எழுத்துத் தேர்விற்கு முன், செய்முறை தேர்வுகள் நடத்தப்படும்.


    இதில், அகத்தேர்விற்கு (இன்டர்னல்) 5 மதிப்பெண்களும், புறத்தேர்விற்கு (எக்ஸ்டர்னல்) 20 மதிப்பெண்களும் வழங்கப்படும். செய்முறை தேர்வில் கிடைக்கும் 25 மதிப்பெண்ணில், அதிகபட்ச மதிப்பெண்ணை பெரும்பாலான மாணவர்கள் பெற்றுவிடுவர்.

    கடந்தாண்டு வரை இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் தேர்வுகளுக்கு, தலா 4 சோதனைகள் வீதம் மொத்தம் 16 சோதனைகள் தான் பாடத்திட்டத்தில் இடம் பெற்றன. இச்சோதனைகள் தான் தற்போது 26 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இத்தகவல், மாணவர்களுக்கு தற்போது வழங்கப்பட்ட இலவச புத்தகங்களில் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

    இப்புதிய பாடத்திட்டப்படி, செய்முறைத் தேர்வுகளுக்கான சோதனைகள் பகுதி அ மற்றும் பகுதி ஆ என இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளன. இயற்பியல், வேதியியல், தாவரவியலில் தலா 3 சோதனைகளும், விலங்கியலில் 4 என, இரு பகுதிகளிலும் (13+13) 26 சோதனைகள் இடம் பெற்றுள்ளன.

    இதுகுறித்து உயர்நிலை பள்ளி அறிவியல் ஆசிரியர்கள் கூறுகையில், "செய்முறை தேர்வில் அதிகரித்துள்ள சோதனைகள் குறித்து அதிகாரிகள் இதுவரை எங்களுக்கு தெரிவிக்கவில்லை. புத்தகங்களை பார்த்து தான் நாங்களே தெரிந்துகொண்டோம். அதிகாரிகள் உத்தரவுப்படி செய்முறை தேர்வுகளை நடத்துவோம்" என்றனர்.

    No comments: