Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, June 2, 2014

    பிளஸ் 1 புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் அவதி

    பிளஸ் 1 புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் அலைமோதுகின்றனர். இதனால், பழைய புத்தகங்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், கடந்த 23ம் தேதி வெளியானது. 90.70 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ் ஜூன் முதல் வாரத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இந்நிலையில், பெரும்பாலான மேல்நிலைப் பள்ளிகளில் அசல் மதிப்பெண் பட்டியல் இல்லாமல், இணையதளத்தில் வெளியான மதிப்பெண் பட்டியல் நகலை வைத்து, மாணவர் சேர்க்கையை முடித்து விட்டனர்.

    வரும் 16ம் தேதி பிளஸ் 1 வகுப்பு துவங்கும் என, அரசு மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் தெரிவித்துள்ளன. ஆனால், கோவை மாவட்டத்தில் எங்கும் பிளஸ் 1 புத்தகங்கள் கிடைப்பதில்லை. தமிழ்நாடு பாடநுால் கழகத்தில் விசாரித்தாலும் புத்தகம் எப்போது வரும் என்பதை உறுதியாக தெரிவிப்பதில்லை. இதனால், 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் பலர், பழைய புத்தக கடைகளில் தேடி வாங்கி வருகின்றனர்.

    மாணவர்கள் கூறுகையில், "கோவையில் எந்த புத்தக கடையிலும் பிளஸ் 1 பாட புத்தகங்கள் கிடைப்பதில்லை. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில், நான்கு அல்லது ஐந்து மாதங்கள் மட்டுமே பிளஸ் 1 பாடங்கள் நடத்துவர். அதன்பின், பிளஸ் 2 பாடங்கள் தான் நடத்தப்படும். நான்கு மாதங்களுக்குத்தான் என்பதாலும், புதிய புத்தகங்கள் எங்கும் கிடைக்காததாலும், பழைய புத்தகங்களை வாங்குகிறோம்" என்றனர்.

    No comments: