Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, December 9, 2013

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர் விவரம் பதிய உத்தரவு

    பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின் விவரங்களை, வாரத்திற்கு எட்டு மாவட்டங்கள் வீதம் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

    பொதுத் தேர்வு எழுத உள்ள பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியரின் விவரங்களை, தேர்வுத் துறை ஏற்கனவே வழங்கிய படிவத்தின் மூலம், தலைமை ஆசிரியர்கள் பெற்றுள்ளனர்.
    இந்த விவரங்களை பெறும் பணியை 10ம் தேதிக்குள் முடிக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அந்த விவரங்களை, தேர்வுத்துறை இணையதளத்தில், பதிவேற்றம் (அப்லோட்) செய்ய வேண்டும்.

    ஒரே நேரத்தில், அனைத்து மாவட்ட விவரங்களும், அப்லோட் செய்ய முடியாது என்பதால், ஒரு வாரத்திற்கு, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த விவரங்கள் மட்டும் பதிய வேண்டும் என மாவட்ட அதிகாரிகளுக்கு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி எந்தெந்த மாவட்டங்கள், எந்தெந்த தேதியில் இணையதளத்தில், விவரங்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

    ஜனவரி 10ம் தேதிக்குள் இந்த பணி முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி இறுதியில், செய்முறை தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு, பதிவு எண்கள் வழங்கப்படும். பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் வாரத்திலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி இறுதியில் இருந்தும் செய்முறை தேர்வு நடக்கிறது.

    No comments: