Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, December 9, 2013

    அட்மிஷன் பணி: தனியார் பள்ளிகளுக்கு "வழக்கமான" எச்சரிக்கை

    "சி.பி.எஸ்.இ., பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரலுக்கு முன்னதாக மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது. மீறினால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்போம்" என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர், பிச்சை எச்சரித்து உள்ளார்.

    ஒவ்வொரு ஆண்டும், பெரிய பள்ளிகளில், டிசம்பர் முதல் ஜனவரிக்குள், மாணவர் சேர்க்கை முடிந்து விடுகிறது. "முன்கூட்டியே, மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது. மீறினால், நடவடிக்கை எடுப்போம்" என கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை மணி அடித்தாலும், பெரிய பள்ளிகள் அசருவதில்லை. இந்த ஆண்டும் பெரிய பள்ளிகளின் அத்துமீறல் வழக்கம் போல் ஆங்காங்கே துவங்கி விட்டது. இதையடுத்து, "வழக்கமான" எச்சரிக்கையை, கல்வித்துறை விடுத்துள்ளது.

    இதுகுறித்து, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை கூறியதாவது: ஏப்ரல், மே மாதத்தில் தான், மாணவர் சேர்க்கை பணிகளை துவங்க வேண்டும். சில பள்ளிகளில், முன்கூட்டியே பணிகள் துவங்குவதாக வரும் தகவலை அடுத்து, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளோம். "சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், இந்த விதிமுறையை கடைபிடிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளோம். இதுதொடர்பாக, சென்னையில் உள்ள, சி.பி.எஸ்.இ., மண்டல அதிகாரிகளுக்கும், கடிதம் அனுப்பி உள்ளோம்.

    மாணவர் சேர்க்கை பணிகளை, ஏப்ரல் 2ல் ஆரம்பித்து, மே மாத இறுதியில் முடிக்க வேண்டும். இதை மீறும் பள்ளிகள் மீது, கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு, பிச்சை தெரிவித்தார்.

    No comments: