Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, May 22, 2013

    தானியங்கி முறை சம்பளம் வழங்கலில் குளறுபடி : அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழக அரசு கருவூலக் கணக்குத்துறையில் அரசு ஊழியர்களுக்கான சம்ப ளம் வழங்குவதற்கு தானி யங்கி பட்டியல் ஒப்பளிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
    மாத இறுதி நாளிலேயே ஊழியர்கள் சம்பளம் பெற்று வந்த நிலையில், இப்புதிய முறையால் ஒரு வாரகாலம் வரை சில ஊழியர்கள் சம்பளம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள் ளது.இம்முறையில் தேவை யான மாற்றம் செய்து அனைத்து ஊழியர்களுக் கும் உரிய காலத்தில் பணப் பலன்கள் கிடைக்க நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி யும், அதுவரை தானியங்கி பட்டியல் ஒப்பளிப்பு முறை யை தற்காலிகமாக நிறுத்தி வைக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.புதுக்கோட்டை மாவட் டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பொது அலுவலக வளாகம் மற்றும் அனைத்து வட்டத் தலைநக ரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கி. ஜெயபாலன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செய லாளர் சி.கோவிந்தசாமி, ஊரக வளர்ச்சித்துறை சார் பில் தி.நடராஜன், சமூக நலத்துறை சார்பில் ஆர். ரெங்கசாமி, வருவாய்த் துறை சார்ப்பில் பெரிய சாமி, நில அளவைத்துறை சார்பில் வெள்ளைச்சாமி, மகளிர் துணைக்குழு ஒருங் கிணைப்பாளர் இந்திரா உள்ளிட்டோர் பேசினர். கரூர்கரூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.மோகன்குமார் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் எம்.சுப்பிர மணியன் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றி னார். துறைவாரி சங்கங் களின் தலைவர்கள் கார்த்தி கேயன், மாதவன், பழ.நாக ராஜன், து.ராகராஜன், ராஜேந்திரன், குழந்தை வேலு, சந்திரன், விஜயக் குமார், செல்லமுத்து, பால கிருஷ்ணன், நாராயணன், இளங்கோவன், கண்ண தாசன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.

    No comments: