Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, May 27, 2013

    தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டத்துக்கு ஐ.நா. பாராட்டு

    இதுதொடர்பாக உலக உணவுத் திட்ட செயல் இயக்குநர் எர்தாரின் கசின் கூறியதாவது: பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு உணவு வழங்குவது முக்கியமானதாகும். பல்வேறு வளரும் நாடுகளில் இதில் கவனம் செலுத்தப்படவில்லை.
    பள்ளியில் உணவு அளிப்பது என்பது, தரமான கல்வியை அளிப்பதை உறுதி செய்யும். இது குழந்தைகளுக்காக செய்யும் சிறந்த முதலீடாகும். இதனால் குழந்தைகள், சுகாதாரத்துடன், வலு மிக்கவர்களாக விளங்குவர். இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் குழந்தைகளுக்கு பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டம் கடந்த 1960-ல் அப்போதைய முதல்வர் கே.காமராஜால் கொண்டு வரப்பட்டது.

    வறுமை காரணமாக குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருப்பதை தடுப்பதற்காக இத்திட்டத்தை அவர் கொண்டு வந்தார். இத்திட்டம் இப்போது மிகச்சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

    உலகம் முழுவதும் 169 வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் 3.6 கோடி குழந்தைகள் நாள்தோறும் ஒருவேளை உணவை பள்ளியில் பெறுகின்றன. ஏழை நாடுகளில் 18 சதவீதம் குழந்தைகளுக்கு தான் உணவு கிடைக்கிறது.

    கடந்த 5 ஆண்டுகளில் 38 நாடுகளில் மத்திய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    குறிப்பாக விலை உயர்வு, எரிபொருள் பெறுவதில் சிக்கல், இயற்கை பேரழிவு போன்றவற்றால் பள்ளிகளில் உணவு வழங்கும் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது என்று எர்தாரின் குறிப்பிட்டார்.

    No comments: