Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, May 27, 2013

    "சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றவர்களை அரசு பள்ளிகளில் பிளஸ்,1ல் சேர்க்க வேண்டியதில்லை" - கேரள உயர்நீதிமன்றம்

    சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 2008ம் ஆண்டு வரை சிபிஎஸ்இ வாரியமே நேரடியாக தேர்வு நடத்தி வந்தது. 2009ம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ.யில் படிக்கும் மாணவர்கள் பள்ளி அளவிலும், வாரியம் அளவிலும் தேர்வு
    எழுதினர். இந்நிலையில், பள்ளி அளவில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போதுமான தகுதி இருக்காது என்பதால் அவர்களுக்கு அரசு பள்ளிகளில் பிளஸ்,1ல் சேர அனுமதிக்க முடியாது என்று கேரள அரசு கடந்தாண்டு உத்தரவு பிறப்பித்தது.

    அரசின் இந்த உத்தரவை எதிர்த்து முஸ்லிம் சர்வீஸ் சொசைட்டி என்ற நிறுவனமும், சில மாணவர்களும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை கடந்த மாதம் விசாரித்த நீதிமன்றம், கேரள அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித் தது. இந்த தடையை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு செய்தது.

    இதை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அரசு பள்ளிகளில் பிளஸ், 1ல் சேர சிபிஎஸ்இ பள்ளி அளவிலான தேர்வில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை அனுமதிக்க தேவையில்லை என்ற கேரள அரசின் உத்தரவை நீதிபதிகள் உறுதி செய்தனர்.

    No comments: