Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, May 28, 2013

    அண்ணாபல்கலைக்கழகத்தில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு என்ஜினீயரிங் கட் ஆப்

    சி.பி.எஸ்.இ. 12–வது படித்த மாணவர்கள் என்ஜினீயரிங் படிப்பில் பி.இ. அல்லது பி.டெக். சேர அண்ணாபல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் கட் ஆப் மார்க் எப்படி கணக்கிடப்படும் என்று கேட்டதற்கு
    அண்ணாபல்கலைக்கழக என்ஜினீயரிங் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறிய விளக்கம் வருமாறு:– சி.பி.எஸ்.இ. படித்த மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் 100 மார்க்குக்குத் தான் சான்றிதழ் வைத்துள்ளனர். எனவே அவர்கள் கணிதத்தில் எடுத்த மார்க் அப்படியே எடுத்துக்கொள்ளப்படும்.

    மேலும் இயற்பியல் பாடத்தில் 100–க்கு என்ன மார்க் எடுத்தார்களோ அந்த மார்க்கு 2 ஆக வகுக்கப்படும். வேதியியல் பாடத்தில் 100–க்கு எடுத்த மதிப்பெண் 2 ஆக வகுக்கப்படும். உதாரணமாக ஒரு மாணவர் கணிதத்தில் 100–க்கு 100 மார்க் எடுத்தால் அந்த மார்க் 100 அப்படியே எடுத்துக்கொள்ளப்படும். அவர் இயற்பியலில் 99 மார்க்கு எடுத்தால் அது 2 ஆக வகுக்கப்பட்டு 49.5 மார்க் சேர்க்கப்படும். அவர் வேதியியல் பாடத்தில் 98 மார்க் எடுத்திருந்தால் அதை 2 ஆல் வகுத்தால் வரக்கூடிய 49 மார்க் எடுத்துக்கொள்ளப்படும். மொத்தத்தில் அந்த மாணவர் எடுத்த கட் ஆப் மார்க் 198.5 ஆகும். இவ்வாறு ரைமண்ட் தெரிவித்தார். அதுபோலத்தான் மருத்துவ கட் ஆப் மார்க்கும் கணக்கிடவேண்டும். இதில் கணிதத்திற்கு பதிலாக உயிரியலில் 100–க்கு எடுத்த மதிப்பெண் எடுத்துக்கொள்ளப்படும்.

    No comments: