Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, May 30, 2013

    10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 31ம் தேதி வெளியீடு

    பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள், நாளை (31ம் தேதி), காலை, 9.15 மணிக்கு வெளியாகிறது. அரசின் இணையதளங்களில் மட்டுமே தேர்வு முடிவுகளை பார்க்க முடியும் என கல்வி துறை அறிவித்துள்ளது.
    தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொது தேர்வு, மார்ச், 27ம் தேதி துவங்கி, ஏப்ரல், 12ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 5,43,152 பேர் மாணவர்கள்; 5,25,686 பேர் மாணவியர் என, மொத்தம், 10 லட்சத்து, 68 ஆயிரத்து, 838 பேர் தேர்வு எழுதினர்.

    "தேர்வு முடிவுகள், மே, 31ம் தேதி வெளியிடுப்படும்" என, இம்மாதம் முதல் வாரத்திலேயே தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான பணிகளை முழு வீச்சுடன் அரசு தேர்வு துறை செய்து வருகிறது.

    பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள், நாளை காலை, 9:15 மணியளவில் வெளியாகிறது. அரசின் இணையதளங்களில் மட்டுமே தேர்வு முடிவுகளை பார்க்க முடியும் என கல்வி துறை அறிவித்துள்ளது. www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in ஆகிய அரசு இணையதளங்களில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

    சென்னை மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை, கலெக்டர் அலுவலக தரை தளத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் மையத்திலும், ஐந்தாம் தளத்தில் உள்ள தேசிய தகவல் மையத்திலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில், 57,559 பேர், 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர்.

    No comments: