Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, May 22, 2013

    போலி சான்றிதழை பயன்படுத்தி பதவி உயர்வு: அரசு அலுவலர் மீது வழக்கு

    போலி சான்றிதழ் கொடுத்து பதவி உயர்வு பெற்றதாக வணிகவரித் துறை அலுவலர் மீது வேலூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் வணிகவரி ஆணையர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் லோகநாதன். இவர் 2000-வது ஆண்டில் இளநிலை கணக்கியல் படிப்பு சான்றிதழ் சமர்ப்பித்து துறைரீதியான பதவியை கோரினாராம். அதைத் தொடர்ந்து அவருக்கு 2003-ல் உதவி வணிகவரி அலுவலர் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இப்போது அவர் சேலம் வணிகவரி ஆணையர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சத்தியமங்கலம் வட்ட உதவி வணிகவரி அலுவலராக பணிபுரிகிறார்.

    இந்நிலையில், லோகநாதன் பதவி உயர்வுக்காக அளித்த சான்றிதழ் போலியானது என தெரிய வந்ததை அடுத்து வேலூர் வணிகவரி உதவி ஆணையர் கஜபதி, மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தார். லோகநாதன் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    No comments: