Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, May 7, 2013

    மாவட்ட ஆட்சியர் உத்தரவால் பணிந்த பள்ளி நிர்வாகம்

    அரசு அறிவிப்புப்படி கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ், ஏழை மாணவியை ஒன்றாம் வகுப்பு சேர்க்க இழுத்தடித்த தனியார் பள்ளி நிர்வாகம், ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால், அந்த மாணவிக்கு விண்ணப்பம் வழங்கி உள்ளது.
    திருச்சி, கே.கே.,நகர் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் மனைவி சுதா. இவர் தனது மகள் மீனாட்சியை அப்பகுதியில் உள்ள ஆல்ஃபா மெட்ரிக் பள்ளியில் சேர்க்க விரும்பினார். ஏழ்மை நிலையில் உள்ள இவர், கடந்தாண்டு தனது மகளுக்கு ஒன்றாம் வகுப்பு சேர்க்க "சீட்" கேட்டார். பள்ளி நிர்வாகம் உரிய பதில் அளிக்கவில்லை.

    "ஏழை குழந்தைக்கு தனியார் பள்ளியில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இடமளிக்க வேண்டும்" என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நடப்பாண்டு தனது குழந்தையை ஒன்றாம் வகுப்பு சேர்க்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்தை பலமுறை தொடர்பு கொண்டு கேட்டபோதும், உரிய பதில் இல்லை.

    இதனால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடம் புகார் அளித்தார். அவர்கள் அறிவுரைப்படி, கடந்த 2ம் தேதி அப்பள்ளிக்குச் சென்றார். அப்போதும் விண்ணப்பம் வழங்கவில்லை. 8ம் தேதி வரும்படி கூறியுள்ளனர்.

    தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதால், திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீயிடம் நேற்று மனு அளித்தார். அதில், "தொடர்ந்து அலைக்கழிக்கப்படுகிறேன். அரசு உத்தரவுப்படி எனது குழந்தையை அப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு (மெட்ரிக் அல்லது சி.பி.எஸ்.இ.,) சேர்க்க உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து ஆட்சியர் ஜெயஸ்ரீயின் அதிரடி நடவடிக்கையால், அந்த மாணவியை சேர்க்க பள்ளி சார்பில் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.

    No comments: