Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, May 7, 2013

    கல்விக்கடன் வழங்காமல் வங்கியில் இழுத்தடிப்பு: பி.எட்., மாணவியர் புகார்

    கல்வி கடன் வழங்காமல், வங்கி நிர்வாகம் இழுத்தடிப்பதால், இறுதி தேர்வு எழுத முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பி.எட்., கல்லூரி மாணவியர், கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றியம் வனவாசியைச் சேர்ந்த கலைவாணி, செல்லம் ஆகியோர், கலெக்டர் மகரபூஷணத்திடம் அளித்த மனுவில், சங்ககிரியில் உள்ள, தனியார் பி.எட்., கல்லூரியில் படித்து வருகிறோம். 70 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளனர். நான்கு தவணையாக பணத்தை செலுத்த வேண்டும்.

    35 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளோம். மீதமுள்ள, 35 ஆயிரம் ரூபாயை செலுத்தினால் தான் தேர்வு எழுதுவதற்கு அனுமதிப்போம் என, நிர்வாகம் கூறுகிறது. இதற்காக, வங்கியில் கல்வி கடன் கோரி விண்ணப்பித்தோம். வங்கியில், கடன் உதவி வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்.

    எங்களுடைய குடும்பம் வறுமை நிலையில் உள்ளதால், நெசவுத்தொழில் செய்து படித்து வருகிறோம். வங்கி மூலம் கடனுதவி வழங்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

    No comments: