கல்வி கடன் வழங்காமல், வங்கி நிர்வாகம் இழுத்தடிப்பதால், இறுதி தேர்வு எழுத முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பி.எட்., கல்லூரி மாணவியர், கலெக்டரிடம் மனு அளித்தனர்.
சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றியம் வனவாசியைச் சேர்ந்த கலைவாணி, செல்லம் ஆகியோர், கலெக்டர் மகரபூஷணத்திடம் அளித்த மனுவில், சங்ககிரியில் உள்ள, தனியார் பி.எட்., கல்லூரியில் படித்து வருகிறோம். 70 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளனர். நான்கு தவணையாக பணத்தை செலுத்த வேண்டும்.
35 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளோம். மீதமுள்ள, 35 ஆயிரம் ரூபாயை செலுத்தினால் தான் தேர்வு எழுதுவதற்கு அனுமதிப்போம் என, நிர்வாகம் கூறுகிறது. இதற்காக, வங்கியில் கல்வி கடன் கோரி விண்ணப்பித்தோம். வங்கியில், கடன் உதவி வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்.
எங்களுடைய குடும்பம் வறுமை நிலையில் உள்ளதால், நெசவுத்தொழில் செய்து படித்து வருகிறோம். வங்கி மூலம் கடனுதவி வழங்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
35 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளோம். மீதமுள்ள, 35 ஆயிரம் ரூபாயை செலுத்தினால் தான் தேர்வு எழுதுவதற்கு அனுமதிப்போம் என, நிர்வாகம் கூறுகிறது. இதற்காக, வங்கியில் கல்வி கடன் கோரி விண்ணப்பித்தோம். வங்கியில், கடன் உதவி வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்.
எங்களுடைய குடும்பம் வறுமை நிலையில் உள்ளதால், நெசவுத்தொழில் செய்து படித்து வருகிறோம். வங்கி மூலம் கடனுதவி வழங்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment