Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, May 20, 2013

    இவர், இப்படி..."பிரம்மோஸ்" ஏவுகணையின் தந்தை

    பூமியைப் போல், மனிதன் வாழ்வதற்கு ஏற்ற, இரண்டு கோள்களைக் கண்டுபிடித்தவர், தமிழகத்தைச் சேர்ந்த, விண்வெளி மற்றும் ஏவுகணை தொழில்நுட்ப விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை.
    "கெப்லர் 22 எச்&' மற்றும் "கிலிசென் 667 சி&' என்ற, இரண்டு கோள்களைக் கண்டுபிடித்துள்ள இவர், அந்த இரண்டு கோள்களும், மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை கொண்டவை என, அறிவித்து, மனிதர்கள் வாழ, இன்னும் இரண்டு கோள்கள் உள்ளன என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார்.

    சூரிய குடும்பத்தைச் சேராத இந்த, இரண்டு கோள்களும், எளிதில் சென்று வரக் கூடிய, 122 ஒளி ஆண்டு தூரத்தில் தான் இருக்கிறது எனத் தெரிவித்து, இந்தியர்களின் விண்வெளிப் பயணப் பசியைத் தூண்டி உள்ளார், சிவதாணுப்பிள்ளை.இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து உருவாக்கியுள்ள, "பிரம்மோஸ்&' ஏவுகணையின் தந்தை&' என, போற்றப்படும் இவர், பிற முக்கிய ஏவுகணைகளான, அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் தயாரிப்பிலும் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றி உள்ளார்.

    இந்திய விண்வெளி உலகின் முன்னணியாளர்களாகக் கருதப்படும், விக்ரம் சாராபாய், சதிஷ் தவான், அப்துல் கலாம் போன்றவர்களுடன் இணைந்து, சில காலம் பணியாற்றியுள்ள சிவதாணுப்பிள்ளைக்கு, சில நாட்களுக்கு முன், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, "பத்மபூஷண்&' விருது வழங்கி கவுரவித்தார்.

    அதற்கு முன், "பத்மஸ்ரீ&' மற்றும் விக்ரம்சாராபாய் ஆராய்ச்சி விருது போன்ற விருதுகளையும், பல கவுரவங்களையும் பெற்றுள்ள சிவதாணுப்பிள்ளை, 1991ல் இருந்து, ஏவுகணை தயாரிப்பு தொழில்நுட்பத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

    "பிரம்மோஸ்&' ஏவுகணைகள், ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவின், "பிரம்மபுத்ரா&', ரஷ்யாவின், "மாஸ்கோவ்&' நதிகளின் பெயர்களை இணைத்து, "பிரம்மோஸ்&' என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த ஏவுகணைகள், உலக அளவில் இந்தியாவின் ஏவுகணை திறனை வெளிக்காட்டி உள்ளன.

    அமெரிக்காவுக்கும், ஈராக்குக்கும் இடையேயான, வளைகுடா போருக்குப் பிறகு தான், போர் ஏவுகணைகள் தயாரிக்க வேண்டும் என்ற உத்வேகம், மத்திய அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. அதற்கு, "பிரம்மோஸ்&' என்ற பெயரில், உருவம் கொடுத்தவர் சிவதாணுப்பிள்ளை என்றால் மிகையில்லை.


    No comments: