அரசு கல்லூரியில் ஆங்கில மொழித்திறன் வளர்ச்சி மேம்பாட்டு பயிற்சிக்கான நுழைவுத் தேர்வில் 803 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தமிழக அரசு, ஐ.எல்.எப்.எஸ்., கல்வி நிறுவனம் சார்பில் கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் ஆங்கில மொழித் திறன்வளர்ச்சி மேம்பாட்டு பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு நடந்தது. இதில் கல்லூரியைச் சேர்ந்த 803 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டில் 235 மணி நேர பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இதில் கலந்துரையாடல் திறன் வளர்த்தல் உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும்.
No comments:
Post a Comment