Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, May 22, 2013

    நலத்திட்டங்கள் கிடைக்கவில்லையா? கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கலாம்

    வட்டாட்சியர் அலுவலகத்தில் குறிப்பிட்ட காலத்துக்குள் சான்றுகள் பட்டா மாற்றம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்படவில்லை எனில் கட்டுப்பாட்டு அறையில் புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து சான்றுகள், பட்டா மாற்றம் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்பட வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    அவ்வாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு சான்றுகள், பட்டா மாற்றம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்படவில்லை எனில் அது குறித்து உடனடியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுபாட்டு அறைக்கு தெரியப்படுத்தலாம்.

    அலுவலகத்துக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் எவரையும் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும், அவ்வாறு சம்பந்தமில்லாமல் வெளி நபர்கள் எவரேனும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்படி பணிகளில் ஈடுபட்டாலோ, இடையூறுகள் செய்தாலோ கட்டுபாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    அவர்களின் மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள காவல் ஆணையருக்கு பரிந்துரைக்கப்படும்.

    மேலும், விவரம் தெரிவிக்கும் நபர்களின் பெயர்கள் பாதுகாப்பு கருதி ரகசியமாக வைக்கப்படும். புகார் தெரிவிப்பவர்கள் அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 வரை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

    புகார் தெரிவிக்கும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் - 2526 8323 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1 comment:

    Anonymous said...

    இந்த வசதி மற்ற எல்லா மாவட்டங்களுக்கும் இருந்தால் நன்றாக இருக்கும்.