Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, May 18, 2013

    பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி குறைவு: டி.இ.ஓ., அலுவலகம் முற்றுகை - நாளிதழ் செய்தி

    பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதம் குறைவுக்கு காரணமான, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டி.இ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்ட, 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
    விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைவுக்கு ஆசியர்களே காரணம் ஆவர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி, மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் சார்பில், நேற்று விருத்தாசலம் டி.இ.ஓ., அலுவலகம் முன், முற்றுகை போராட்டம் நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி, மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜி தலைமையில் ஊர்வலமாக வந்து, விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத் தலைவர் வெங்கடேசன், செயலர் செந்தாரைக்கந்தன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். போலீசார், முற்றுகையிட்ட, 25 பேரை கைது செய்தனர்.

    No comments: