Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, May 21, 2013

    பிளஸ் 2 உடனடி தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு

    "பிளஸ் 2 உடனடி தேர்வு தேதி அறிவிப்பு, விரைவில் வெளியாகும்" என பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் தேவராஜன் கூறினார்.
    மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, மாறுதல் கலந்தாய்வு முதன் முதலில் ஆன்லைனில், நேற்று துவங்கியது. மதுரை இளங்கோ மாநகராட்சி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் எட்டு பேருக்கு, பணிமாறுதல் உத்தரவுகளை, தேவராஜன் வழங்கினார்.

    பின்னர் அவர் கூறியதாவது: பிளஸ் 2 உடனடி தேர்வு தேதி அறிவிப்பு, விரைவில் வெளியாகும். தற்போது, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணி நடக்கிறது. ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மாணவர்களுக்கு சிறப்பு கட்டணம், விரைவில் வழங்கப்படும்.

    பெரும்பாலான பள்ளிகளில், இக்கட்டணத்தை செலவிடாமல், 6 லட்ச ரூபாய் வரை வைத்துள்ளனர்; இதுகுறித்து தகவல் சேகரிக்கப்படும். ஆசிரியர்களுக்கு, "உண்மைத் தன்மை சான்று" வழங்குவதில் ஏற்படும் தாமதம், தவிர்க்கப்படும். முதன்மை கல்வி அலுவலர்கள் முடிவின்படி, பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 6 ம் வகுப்பில், ஆங்கில வழிக் கல்வியை துவங்கலாம்.

    ஆண்டுதோறும், மத்திய அரசு, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்திற்கு (ஆர்.எம்.எஸ்.ஏ.,), நிதி ஒதுக்குவதால், 100 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்; இந்த ஆண்டு நிதி கிடைக்காததால், மாநில அரசே முதற்கட்டமாக, 50 பள்ளிகளை தரம் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

    மத்திய அரசு நிதி கிடைத்தால், மேலும் 50 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். இலவச கட்டாய கல்வி திட்டத்தில், பள்ளிகளில் ஒதுக்கீடு செய்துள்ள, 25 சதவீத இடங்கள் குறித்து, வருவாய் மற்றும் பள்ளி கல்வி அலுவலர் குழுவினர் விசாரிக்கின்றனர்.

    ஆசிரியர்கள் மீது எழும் பாலியல் புகார்கள், 50 சதவீதம் வரை, முன்விரோதம் அடிப்படையில் உள்ளன; புகார் உண்மையாக இருக்கும்பட்சத்தில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

    No comments: