Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, May 6, 2013

    25 சதவீத இலவசக் கல்வி முழுமையாக நிறைவேற்றம்: பொதுக்குழுவில் முடிவு

    "தமிழக அரசின், 25 சதவீதம் இலவச கல்வியை, பள்ளிகளில் முழுமையாக நடைமுறைப்படுத்துவது" என, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மாவட்ட தனியார் பள்ளி கூட்டமைப்பின், பொதுக்குழுக் கூட்டம், நாமக்கல் அடுத்த ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
    மாவட்டத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.

    வக்கீல் பாலு, 25 சதவீதம் இலவச கல்வி வழங்குவதில் உள்ள நடைமுறைகள் பற்றி விளக்கினார். ஆடிட்டர் வெங்கடசுப்ரமணியம், தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் குறித்தும், அதில் உள்ள சாதக, பாதகங்கள் பற்றியும் விளக்கிப் பேசினார்.

    கூட்டத்தில், அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கு தேவையான குடிநீர், சுகாதார வசதிகள் மேம்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தமிழக அரசின், 25 சதவீதம் இலவச கல்வியை, பள்ளிகளில் முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    மேலும், கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யும் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டிய கருத்துக்கள், உரிய காலத்துக்குள் சமர்ப்பிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    அதேபோல், இன்றைய சூழ்நிலையில், தனியார் பள்ளிகள் எதிர் கொள்ளும் சிரமங்கள் பற்றியும், ஆலோசனை செய்யப்பட்டது. ராசிபுரம் தாலுகா தலைவர் சிதம்பரம், பொறுப்பாளர்கள் பாலகிருஷ்ணன், வக்கீல் பாலசுப்ரமணியம், நிர்வாகிகள், உறுப்பினர்கள், பள்ளி தாளாளர்கள், முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    No comments: