Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, May 6, 2013

    454 மாணவருக்கு ராஜ்ய புரஸ்கார் விருது

    நாமக்கல் மாவட்டத்தில், 454 மாணவ, மாணவியருக்கு, ராஜ்ய புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.சாரண, சாரணீய இயக்கத்தில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியருக்கு, மாநில அளவில், உயரிய விருதான, ராஜ்ய புரஸ்கார் விருது, மாநில ஆளுனர் வழங்கி வருகிறார்.
    அதன்படி, இந்த ஆண்டு, ஆளுனர் மாளிகையில் நடந்த விழாவில், ஆளுனர் ரோசய்யா தலைமை வகித்து, விருதுகளை வழங்கினார். தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் வைகை செல்வன், பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன், பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் சவிதா, சாரண, சாரணீய முதன்மை செயலர் ராஜேந்திரன், மாநில பேராணையர் மேத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நாமக்கல் மாவட்டத்தில், 185 சாரணர்களும், 258 சாரணீயர்களும், ராஜ்ய புரஸ்கார் விருதுக்கு தேர்வு பெற்றனர். அவர்களுக்கு, மாநில ஆளுனர் ரோசய்யா விருது வழங்கினார். மாநில அளவில் உயரிய விருது பெற்று, நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார், மாவட்ட கல்வி அலுவலர் திலகம், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அருண்மொழிதேவி, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அடைக்கண், மாவட்ட முதன்மை புரவலர் குணசேகரன் ஆகியோர் பாராட்டினர்.

    No comments: