Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, February 14, 2013

    பி.லிட் தமிழாசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் தர மறுப்பு

    பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ., எம்.எஸ்.சி., முடித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வும், எம்எட் முடித்தால் 2வது ஊக்க ஊதிய உயர்வும் அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் தொலைதூரக் கல்வியில் எம். எட்., படிப்பை
    பல்கலைக்கழகங்கள் நிறுத்தின. இதனால் பெரும்பாலான பட்டதாரி ஆசிரியர்கள் எம்பில், பிஎச்டி போன்ற பட்டப் படிப்புகளை படித்தனர். இதையடுத்து எம்எட் படிப்பை போல் எம்.பில்., பி.எச்.டி., முடித்திருந்தாலும் 2வது ஊக்க ஊதிய உயர்வு அளிக்கலாம் என கடந்த ஜனவரி 18ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.
    தமிழாசிரியர்களில் சிலர் பிஎட் படிக்காமல், நேரடியாக பிலிட் தமிழ் முடித்துள்ளனர். அவர்களில் எம்ஏ முடித்தவர்களுக்கு முதல் ஊக்க ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அரசாணைப்படி எம்பில், பிஎச்டி முடித்த தமிழாசிரியர்கள் 2வது ஊக்க ஊதிய உயர்வு கேட்டு கல்வித்துறைக்கு விண்ணப்பித்தனர். ஆனால், பி.எட் படித்திருந்தால் மட்டுமே 2வது ஊக்க ஊதிய உயர்வு அளிக்க முடியும் என கூறி, தமிழாசிரியர்களின் விண்ணப்பங்களை ஏற்க கல்வித்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனால் தமிழாசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து தமிழாசிரியர் ஒருவர் கூறுகையில், கல்வித்துறை அதிகாரிகள் தேவையில்லாமல் பிஎட் படித்தால் மட்டுமே 2வது ஊக்க ஊதிய உயர்வு அளிக்க முடியும் என்று கூறுகின்றனர். இதனால் பி.லிட் படித்த தமிழாசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கல்வித்துறை அதிகாரிகள் அரசிடம் தெளிவான விளக்கம் பெற்று 2வது ஊக்க ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    No comments: